இதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளதா, அல்லது உளவியல் ரீதியான காரணங்கள் உள்ளதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒருவரின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைப்பதற்கு சரியான காரணம் இல்லை. சிலர் இதை அதிர்ஷ்டம் என்று நினைக்கலாம், ஆனால் இதை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

உடலுக்கும் காசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒருவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும், இறந்த பிறகு அவன் வெறும் பிணம்தான்.

ஒருவர் இறந்த பிறகு எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நாணயத்தை வைப்பதன் மூலம் ஒருவரின் பேராசையினால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றதாம்.

கோடிகோடியாக பணம் சொத்துக்கள் சேர்த்து வைத்தும் சிலர் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் அப்படியானவர்களிற்கு இறந்த பிறகு நீங்கள் ஒரு ரூபாயை கூட கொண்டு செல்லமாட்டீர்கள் என எடுத்துக்காட்டவே இந்த நாணயம் வைக்கப்படுகின்றதாம்.