👉 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி மெர்க்குரி விண்கலத் திட்டம் : ஜோன் கிளென், பூமியை மூன்று முறை சுற்றி, பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

👉 1987ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

👉 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் மறைந்தார்.

முக்கிய தினம் :-

உலக சமூக நீதி தினம்


🌟 ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படுகிறது.

🌟 உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.

🌟 ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

பிறந்த நாள் :-

கா.நமச்சிவாயம்


✍ சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.

✍ இவர் சிறுவயதிலேயே நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களை கற்றுத் தேர்ந்தார். பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர், வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம். மாணவர்கள் கேள்வி கேட்க, இவர் பதில் கூறுவார்.

✍ அந்த நாட்களில் வித்வான் பட்டங்கள் சமஸ்கிருத அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அதனால் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றவர்களுக்கும் வித்வான் பட்டம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இவரது கருத்தை அரசு ஏற்று அதை செயல்படுத்தியது.

✍ 1905ஆம் ஆண்டு வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையை போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார்.

✍ பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களையும் எழுதினார். இவர் ஆத்திச்சூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

✍ எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதிய கா.நமச்சிவாயம் தனது 60வது வயதில் (1936) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.


1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.


1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1]


1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.


1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2]


1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.


1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.


1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.


1877 – சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.


1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.


1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.


1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.


1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.[3]


1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.


1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.


1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.


1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.


1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.


1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.


1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.


2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.


2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.


2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.


2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்


1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)


1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)


1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)


1923 – ஹெலன் மர்ரே பிரீ, அமெரிக்க வேதியியலாளர் (இ. 2021)


1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)


1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி


1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)


1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்


1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்


1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்


1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)


1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்


1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்


1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)


1990 – ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்


இன்றைய தின இறப்புகள்


1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723)


1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1711)


1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)


1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)


1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)


1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)


1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)


1972 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)


1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)


1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)


2001 – இந்திரஜித் குப்தா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)


2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)


2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)


2010 – ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)


2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்


2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்


2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)


2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919)


2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933)


இன்றைய தின சிறப்பு நாள்


சமூக நீதிக்கான உலக நாள்