👉 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.

👉 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி IBM சதுரங்கக் கணினி 'Deep Blue' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

முக்கிய தினம் :-

உலக குடை தினம்


🌂 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌂 குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.

🌂 இந்த நாளில் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.

🌂 இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.

உலக திருமண தினம்


💑 உலக திருமண தினம் பிப்ரவரி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) கொண்டாடப்படுகிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாள் :-

ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்


💉 உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

💉 இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்.

💉 போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் (poliomyelitis) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

💉 வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் தனது 88வது வயதில் (1985) மறைந்தார்.


போரிஸ் பாஸ்டர்நாக்


✍ ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமான போரிஸ் பாஸ்டர்நாக் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் பிறந்தார்.

✍ இசைப் பயிற்சி பெற்ற பிறகு கலைத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. பிறகு 1910இல் மாபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளின் கீழ் தத்துவம் பயின்றார்.

✍ 1914இல் எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins In the clouds(1914), Over the Barriers (1917), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

✍ மேலும் இவர் 'கடைசிக் கோடைகாலம்' (The last summer) மற்றும் இவரது சுயசரிதையான Safe conduct(1931) என்ற நாவலை எழுதினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

✍ முதலாம் உலகப் போர்க் காலகட்டத்திலேயே இவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இவர் இப்புதினத்தை 1948இல் எழுத ஆரம்பித்தார். அதனை முடிக்க இவருக்கு சுமார் 10 வருடங்கள் ஆயிற்று.

✍ 1903ம் ஆண்டு வரையில் மருத்துவராகவும், கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இந்நூல் 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் பெற்றது.

✍ கலை துறைக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்த போரிஸ் பாஸ்டர்நாக் தனது 70வது வயதில் (1960) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது.1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.


1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.


1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.


1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.


1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.


1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.


1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.


1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.


1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.


1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.


1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.


1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.


1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.


1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.


1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.


1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்ரம் இடம்பெற்றது.


1964 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் “மெல்பேர்ன்” என்ற விமானந்தாங்கிக் கப்பலும் “வொயேஜர்” என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.


1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.


1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.


1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.


1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.


1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.


2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.


2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.


2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்


1775 – சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834)1785 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836)


1805 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ. 1871)


1825 – சாமுவேல் பிளிம்சால், ஆங்கிலேய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1898)


1842 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (இ. 1907)


1848 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (இ. 1936)


1890 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960)


1893 – பில் டில்டென், அமெரிக்க டென்னிசு ஆட்டவீரர், பயிற்சியாளர் (இ. 1953)


1897 – ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985)


1898 – பெர்தோல்ட் பிரெக்ட், செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956)


1902 – வால்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1987)


1916 – தர்பாரா சிங், பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990)


1919 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010)


1929 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)


1937 – தா. கிருட்டிணன், தமிழக அரசியல்வாதி (இ. 2003)


1952 – லீ சியன் லூங், சிங்கப்பூரின் 3வது பிரதமர்


1957 – காத்தரைன் பிரீசு, அமெரிக்க வானியற்பியலாளர்


1982 – ஜஸ்டின் காட்லின், அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்


1984 – அல்போன்சு புத்திரன், இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்


1985 – மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி


இன்றைய தின இறப்புகள்


1307 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1265)1837 – அலெக்சாந்தர் பூஷ்கின், உருசியக் கவிஞர் (பி. 1799)


1865 – ஹைன்ரிக் லென்ஸ், எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804)


1868 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781)


1878 – கிளவுட் பெர்னாட், பிரான்சிய உயிரியலாளர் (பி. 1813)


1891 – சோஃபியா கோவலெவ்சுகாயா, சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)


1912 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827)


1923 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845)


1944 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870)


1953 – என். கோபாலசாமி அய்யங்கார், இந்திய அரசியல்வாதி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சர் (பி. 1882)


1993 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1906)


2001 – கே. தவமணி தேவி, இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை


2005 – ஆர்தர் மில்லர், அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915)


2010 – கிரீஷ் புத்தன்சேரி, மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957)


2020 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (பி. 1921)


இன்றைய தின சிறப்பு நாள்


குருதிய எழுத்தாளர் ஒன்றிய நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)