👉 1827ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி மறைந்தார்.

நினைவு நாள் :-

மோதிலால் நேரு


🏁 நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.

🏁 ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.

🏁 இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

🏁 இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு தனது 69வது வயதில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

கான் அப்துல் கஃபார் கான்


🌟 பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌟 காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற அமைப்பை உருவாக்கிய இவர் அதன்மூலம் தன் மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

🌟 பின்பு தனது அமைப்பை காங்கிரஸுடன் இணைத்தார். 1929ஆம் ஆண்டு குதாய் கித்மத்கர் என்ற அமைதி இயக்கத்தை தொடங்கினார். சமூக சீர்திருத்தத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உதவியாக இருந்தது.

🌟 இவருக்கு பாரத ரத்னா விருது 1987ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான். பாட்ஷா கான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் தனது 97வது வயதில் (1988) மறைந்தார்.

வில்லியம் பாரி மர்பி

🌸 இரத்த சோகை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர்களுள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி 1892ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி அமெரிக்காவில் விஸ்காசினில் ஸ்டோட்டன் என்னுமிடத்தில் பிறந்தார்.

🌸 இறப்பினை விளைவிக்கும் கொடிய நோயான இரத்த சோகைக்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர் (மற்ற இருவர் கியார்கு ஹோயித் விப்பிள், கியார்கு ரிச்சர்டு மினோட்). இதற்காக மருத்துவ துறைக்கான நோபல் பரிசை 1934ஆம் ஆண்டு பெற்றார்.

🌸 மருத்துவ துறையில் மக்களுக்கு மகத்தான தொண்டாற்றிய இவர் தன்னுடைய 95வது வயதில் (1987) மறைந்தார்.

ஆர்க்குட் புயுக்கோக்டன்

(Orkut Buyukkokten)

🌺 ஆர்க்குட் என்ற சமூக வலைதளத்தை கண்டுபிடித்த ஆர்க்குட் புயுக்கோக்டன் 1975ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியில் பிறந்தார்.

🌺 இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது கிளப் நெக்சஸ் (Club Nexus) என்னும் அமைப்பை உருவாக்கினார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது ஆர்க்குட் என்னும் சமூக வலை அமைப்பை நிறுவினார். இந்த சமூக வலைதளம் ஜனவரி 22, 2004ஆம் ஆண்டு கூகுளினால் தொடங்கி வைக்கப்பட்டது.

🌺 இன்சர்க்கிள் (InCircle) என்ற ஒரு சமூகவலை அமைப்பை அஃவ்வினிட்டி எஞ்சின்ஸ் (Affinity Engines) என்னும் நிறுவனத்திற்காக உருவாக்கியவர்.


இன்றைய தின நிகழ்வுகள்


60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.


1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.


1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.


1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.[1]


1806 – கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.


1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.


1820 – முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.


1840 – நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.


1851 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.


1863 – இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.[2]


1899 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.


1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.


1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.


1951 – அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.


1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.


1958 – செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.


1959 – டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.


1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.


1978 – அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.


1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.


1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.


2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.


2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.


2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்


1465 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)


1665 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714)


1814 – காரல் கிரவுல், தமிழகத்தில் மறை, தமிழ்ப் பணியாற்றிய செருமனியக் கிறித்தவப் பாதிரியார் (இ. 1864)


1879 – மாண்டேகு, ஆங்கிலேய அரசியல்வாதி, பிரித்தானியாவின் இந்தியாவுக்கான செயலாளர் (இ. 1924)


1884 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர் (இ. 1943)


1890 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1988)


1892 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1987)


1911 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)


1912 – இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)


1921 – சாலமன் பிக்கெல்னர். உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1975)


1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)


1932 – சங்கர் கோசு, இந்திய வங்கக் கவிஞர்


1935 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (இ. 1999)


1945 – பாப் மார்லி, ஜமைக்கா பாடகர், கித்தார் இசைக்கலைஞர் (இ. 1981)


1956 – பிறைசூடன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர்


1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியர்


1983 – சிறிசாந்த், இந்தியத் துடுப்பாளர்


1986 – டேன் டிஹான், அமெரிக்க நடிகர்


இன்றைய தின இறப்புகள்


1685 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630)


1804 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1733)


1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)


1918 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (பி. 1862)


1920 – வின்சென்ட் ஸ்மித், அயர்லாந்து இந்தியவியலாளர், வரலாற்றாளர் (பி. 1843)


1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)


1931 – மோதிலால் நேரு, இந்திய அரசியல்வாதி (பி. 1861)


1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (பி. 1895)


1964 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (பி. 1869)


1973 – ஐரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1898)


இன்றைய தின சிறப்பு நாள்


வைத்தாங்கி நாள் (நியூசிலாந்து நிறுவிய நாள், 1840)