👉 1882ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறந்த நாள் :-

லாலா லஜபதி ராய்


🌟 இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

🌟 இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.

🌟 இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

🌟 இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.

இராஜா இராமண்ணா


🌷 இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.

🌷 எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.

🌷 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Buddha) என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

🌷 இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, Years of Pilgrimage (1991), The Structure of Music in Raga & Western Systems (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

🌷 இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் தன்னுடைய 79வது வயதில் (2004) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.


1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது.


1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார்.


1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.


1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.


1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.


1671 – பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.


1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.


1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.


1754 – சேரந்தீவம் என்ற சொல்லை முதல் தடவையாக சேர் ஒராசு வால்போல் பயன்படுத்தினார்.


1846 – இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.


1855 – பனாமா கால்வாய் வழியே தொடருந்து ஒன்று அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை முதல் தடவையாகச் சென்றது.


1871 – பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.


1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.


1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.


1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.


1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.


1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.


1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.


1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.


1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.


1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.


1984 – வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.


1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.


1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.


2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.


2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.


இன்றைய தின பிறப்புகள்


1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)


1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)


1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)


1832 – தி. முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி (இ. 1895)


1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)


1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)


1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)


1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)


1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)


1931 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (இ. 2019)


1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்


1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்


1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்


1950 – நைலா கபீர், வங்காளதேச-ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர்


1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்


1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை


1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்


1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி


1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்


814 – சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742)


1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)


1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)


1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)


1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)


1993 – எலன் சாயர் கோகு, கனடிய வானியலாளர் (பி. 1905)


1996 – ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்கக் கவிஞர் (பி. 1940)


1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)


2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)


2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)


2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)


2021 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (பி. 1927