👉 1908ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

👉 1970ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

பிறந்த நாள் :-

டாக்டர் பகவான் தாஸ்


🌸 சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் பகவான் தாஸ் 1869ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்தார். 

🌸 இவர் கல்வியிலும், எழுத்துப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல்வேறு மதங்கள், தத்துவங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேய ஆட்சி முறை காரணமாக மிக மோசமான நிலையில் இருந்து வந்த இந்திய மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டைக் காக்க வேண்டும் என உறுதியேற்றார்.

🌸 இவருக்கு 1955ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தத்துவமேதையுமான டாக்டர் பகவான் தாஸ் 89வது வயதில் (1958) மறைந்தார்.

சுவாமி விவேகானந்தர்


🌟 இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

🌟 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

🌟 இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.

🌟 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

🌟 ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

🌟 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'.

🌟 இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் (1902) காலமானார்.

இன்றைய தின நிகழ்வுகள்


1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார்.


1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.


1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.


1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.


1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1]


1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.


1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.


1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.


1915 – அமெரிக்க காங்கிரசு பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.


1918 – இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.


1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.


1940 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.


1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.


1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.


1967 – எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.


1970 – நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.


1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.


1990 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


1991 – பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது.


1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.


1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.


2004 – உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான “குயீன் மேரி 2” தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.


2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.


2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.


2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


2010 – எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.


2015 – கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்


1598 – ஜிஜாபாய், பேரரசர் சிவாஜியின் அன்னை (இ. 1674)


1746 – யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1827)


1848 – பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு, செருமனிய வேளாண்மை வேதியியலாளர் (இ. 1926)


1863 – விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902)


1869 – பக்வான் தாஸ், இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1958)


1893 – எர்மன் கோரிங், செருமானிய இராணுவத் தலைவர், அரசியல்வாதி (இ. 1946)


1893 – ஆல்பிரட் ரோசன்பெர்க், எசுத்தோனிய-செருமானிய கட்டிடக்கலைஞர், அரசியல்வாதி (இ. 1946)


1895 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய உயிரிவேதியியலாளர் (இ. 1948)


1918 – மகேஷ் யோகி, இந்திய-இடச்சு மதகுரு (இ. 2008)


1924 – எஸ். எம். அப்துல் மஜீத், தமிழக அரசியல்வாதி


1936 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (இ. 2016)


1944 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (இ. 2011)


1949 – அமாதி ஜெபாலி, துனீசியாவின் 19வது பிரதமர்


1949 – அருக்கி முரகாமி, சப்பானிய எழுத்தாளர்


1956 – மரீ கோல்வின், பிரித்தானிய ஊடகவியலாளர் (இ. 2012)


1956 – நிக்கலாய் நசுக்கோவ், சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர்


1964 – ஜெப் பெசோஸ், அமேசான்.காம் தளத்தை ஆரம்பித்த அமெரிக்கக் கணினியியலாளர், தொழிலதிபர்


1967 – சஜித் பிரேமதாச, இலங்கை அரசியல்வாதி


1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி


1990 – சேர்ஜே கார்ஜக்கின், உருசிய-உக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரர்


இன்றைய தின இறப்புகள்


1665 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1601)


1909 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, லித்துவேனிய-செருமானியக் கணிதவியலாளர் (பி. 1864)


1934 – சூரியா சென், வங்காளதேசக் கல்வியாளர், செயல்பாட்டாளர் (பி. 1894)


1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1890)


2000 – இரா. நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (பி. 1920


2005 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (பி. 1932)


2007 – முருகு சுந்தரம், தமிழகக் கவிஞர் (பி. 1929)


2009 – புலோலியூர் க. தம்பையா, இலங்கை எழுத்தாளர்


2013 – ஐ. கே. கே. மேனன், மலையாள எழுத்தாளர் (பி. [1919]])


2014 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)


2017 – ச. வே. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1929)


இன்றைய தின சிறப்பு நாள்


தேசிய இளைஞர் நாள் (இந்தியா)


சான்சிபார் புரட்சி நாள் (தன்சானிய