👉 1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

👉 1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தார்.

👉 1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நினைவு நாள் :-

கார்ல் லின்னேயஸ்


🌟நவீன வகைப்பாட்டியலின் தந்தை, கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.

🌟இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.

🌟புதுவகை தாவரங்களை கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது இயற்கையின் அமைப்பு (ளுலளவநஅய யேவரசயந) நூல் 1735-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

🌟1753-ல் இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட தி ஸ்பீசிஸ் ஆப் பிளான்ட்ஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.

🌟தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

குருதயாள் சிங்


🌟 பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌟 இவர் 1957-ல் பாகன்வாலே என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி, பெகனா பிந்த் உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

🌟 பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார், பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 விருதுகளையும் பெற்றுள்ளார்.

🌟 ஞானபீட விருது பெற்ற இவர் தன்னுடைய 83வது வயதில் (2016) மறைந்தார். 

இன்றைய தின நிகழ்வுகள்


9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.


236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.


1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார்.


1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.


1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.


1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.


1840 – ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.


1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.


1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.


1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]


1916 – முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.


1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.


1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.


1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்..


1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.


1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.


1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.


1962 – பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை உயிரிழந்தனர்.


1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.


1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.


1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.


1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.


1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.


1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்சில் இடம்பெற்றது.


2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.


2005 – தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.


2007 – கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.


2013 – பாக்கித்தானில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


2015 – மொசாம்பிக்கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் பித்தநீர் கலக்கப்பட்ட பியரை அருத்தியதால் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்


1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)


1775 – இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851)


1929 – பாலி சாம் நரிமன், இந்திய சட்ட அறிஞர்


1931 – ஆர். சூடாமணி, தமிழகப் பெண் எழுத்தாளர் (இ. 2010)


1931 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய மதகுரு, அரசியல்வாதி (இ. 2015)


1933 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (இ. 2011)


1933 – குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (இ. 2016)


1936 – இராபெர்ட் உட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்


1937 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (இ. 2014)


1938 – டொனால்ட் குனுத், அமெரிக்கக் கணினிவியலாளர்


1940 – கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்


1943 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கலைஞர் (இ. 1999)


1949 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை, செயற்பாட்டாளர் (இ. 2002)


1967 – பழனி திகாம்பரம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிலதிபர்


1974 – கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்


1984 – கல்கி கோய்ச்லின், இந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்


314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)


1761 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)


1775 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (பி. 1697)


1778 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. 1707)


1904 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. 1824)


1951 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)


1957 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (பி. 1889)


1969 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 2வது ஆளுநர் (பி. 1891)


2005 – சங்கர் ராஜி, இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி (பி. 1949)


2006 – ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்


2007 – எஸ். சர்வானந்தா, இலங்கை நீதிபதி, மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (பி. 1923)


2008 – பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1959)


இன்றைய தின சிறப்பு நாள்


பெரும்பான்மையின ஆட்சி நாள் (பகாமாசு)