Satellite likely to fall to Earth tomorrow

1984-ல் பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது.

தற்போது இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2,450 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்புள்ளது. ஆனால், வளிமண்டலத்தில் நுழையும்போதே முற்றிலும் எரிந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.