ஆற்காடு, கத்தியவாடி, மாம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

எனவே நாளை (செவ்வாய்க்கி (ழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவ ரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி,கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற் காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ராணிப்பேட்டை துணை மின் நிலையத்திலும் நாளை (செவ்வாய்கிழமை)  அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. 

இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.