Car with 3 people fell into a well near Arcot

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிக்கல்சன் ரெட்டி, தாக்கா ரெட்டி. இவர்கள் சித்தூரில் இருந்து புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர். 

நரசிம்மலு என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பின்னர் புதுச்சேரியில் இருந்து சித்தூருக்கு புறப்பட்டனர்.

நேற்று மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி ஜி.எம்.நகர் அருகே வரும்போது கார் நிலைதடுமாறி விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த மூன்று பேரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலவை தீயணைப்புத்துறையினர் சென்று கிணற்றிலிருந்து காரை மீட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.