மாண்டாஸ் புயல் பருவ மழையினால் பாலாற்றில் மழை வெள்ள நீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் தடுப்பணை தாண்டி வெள்ளநீர் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் அதேபோல வேலூர் மாவட்டத்தில் இருந்து மோர்தான அணை மற்றும் அகரமாறு மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் மழை வெள்ளநீர் பாலாற்றில் கலந்து இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. பிற்பகல் நிலவரப்படி சுமார் 1500 கன அடி நீர் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை நீர் முழுவதும் பாலாற்றிலேயே காஞ்சிபுரம் நோக்கி அப்படியே அனுப்பப்படுகிறது.

மேலும், தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் அதிக கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாலாற்றில் இறங்க வேண்டாம் எனவும் பாலாற்றங்கரையோரம் மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.