🏁 இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் 1928ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய தினம் :-

சர்வதேச மாணவர்கள் தினம்


👪 சர்வதேச மாணவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

👪 1939ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி செக்கோசிலவாக்கியாவின் (ஐரோப்பா) தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் மாணவர் தலைவர்கள் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம், செக்கோசிலவாக்கியா ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளை இந்நாள் நினைவூட்டி வருகிறது. இத்தினம் முதன்முதலில் 1941ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. 

உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்


👦 உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ஆம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே, அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-

ஜெமினி கணேசன்


🌸 தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.

🌸 கல்யாணப்பரிசு, பூவா தலையா, இரு கோடுகள், வஞ்சிக்கோட்டை வாலிபன், களத்தூர் கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகும்.

🌸 இவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருது, கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, எம்.ஜி.ஆர் தங்கப்பதக்கம் மற்றும் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். ஜெமினி கணேசன் அவர்கள், தன்னுடைய 84வது வயதில் (2005) காலமானார்.

சி.இலக்குவனார்


✍ சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் 1909ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1962ஆம் ஆண்டு தமிழ் காப்புக்கழகத்தை தொடங்கினார். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார்.

✍ முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 63வது வயதில் (1973) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.


1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது.


1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.


1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.


1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.


1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.


1811 – ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.


1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.


1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.


1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.


1873 – பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.


1878 – இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.


1903 – உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.


1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.[1]


1922 – முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.


1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.


1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.


1947 – அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.


1950 – லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.


1953 – அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.


1969 – பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.


1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.


1983 – தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.


1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.


1993 – நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.


1997 – எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.


2000 – பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


2012 – எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.


2013 – உருசியாவில் கசான் விமான நிலையத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய பிறப்புகள்


9 – வெசுப்பாசியான், உரோமைப் பேரரசர் (இ. 79)[2]


1865 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (இ. 1941)


1870 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (இ. 1920)


1870 – செர்கேய் பிளாசுக்கோ, உருசிய வானியலாளர் (இ. 1956)


1885 – சார்லசு ரோஷர், அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளர் (இ. 1974)


1887 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய படைத்துறை அதிகாரி (இ. 1976)


1896 – லெவ் வைகாட்ஸ்கி, பலருசிய-உருசிய மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1934)


1904 – இசாமு நொகுச்சி, அமெரிக்க கட்டிடக்கலைஞர், சிற்பி (இ. 1988)


1906 – சோய்செரோ ஹோண்டா, ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளர் (இ. 1991)


1909 – சி. இலக்குவனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)


1917 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)


1920 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் (இ. 2002)


1922 – இசுட்டான்லி கோகென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்


1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)


1929 – பி. சி. சேகர், மலேசியத் தமிழ் வேதியியலாளர், இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவர் (இ. 2006)


1930 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)


1942 – காயிங் கெக் இயேவ், கம்போடியக் குற்றவாளி


1942 – மார்ட்டின் ஸ்கோர்செசி, அமெரிக்க இயக்குநர், நடிகர்


1950 – கோகிலா மகேந்திரன், ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர், நாடகக் கலைஞர்


1951 – திருச்சி பிரேமானந்தா, இலங்கை-இந்தியத் துறவி (இ. 2011)


1952 – சிறில் ரமபோசா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி


1972 – ரோஜா செல்வமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை


1978 – கீர்த்தி ரெட்டி, தெனிந்தியத் திரைப்பட நடிகை


1982 – யூசுஃப் பதான், இந்தியத் துடுப்பாளர்


1983 – கிறிஸ்டோபர் பாலோனி, அமெரிக்க எழுத்தாளர்


இன்றைய இறப்புகள்


1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516)


1796 – இரண்டாம் கத்தரீன், உருசியப் பேரரசி (பி. 1729)


1858 – இராபர்ட்டு ஓவன், உவெல்சு செயற்பாட்டாளர் (பி. 1771)


1917 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (பி. 1840)


1928 – லாலா லஜபதி ராய், இந்திய அரசியல்வாதி (பி. 1865)


1973 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவர் (பி. 1878)


1989 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1924)


2000 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1904)


2010 – பி. விருத்தாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1940)


2012 – பால் தாக்கரே, மகாராட்டிர-இந்திய அரசியல்வாதி (பி. 1926)


2013 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)


2013 – பூரணி, தமிழக எழுத்தாளர் (பி. 1913)


2013 – திடீர் கண்ணையா, நகைச்சுவை நடிகர் (பி. 1937)


2015 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)


இன்றைய  சிறப்பு நாள்

அனைத்துலக மாணவர் நாள்

உலக குறைப்பிரசவ தினம்