🍁 1845ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை வாசுதேவ் பல்வந்த் பட்கே மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் அருகே ஷிர்தான் என்ற கிராமத்தில் பிறந்தார்.


🍁 1861ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

🍁 1869ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.


பிறந்த நாள் :-


ஜானகி அம்மாள்

🌺 தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார்.

🌺 உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுவுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945-ல் வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.

🌺 இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-ல் நாடு திரும்பினார். மேலும் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

🌺 பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் உருவாக்க வழிவகுத்தன.

🌺 1956ல் மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2000-ஆம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது.

🌺 இந்தியப் பாரம்பரிய தாவரவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் தனது 86-வது வயதில் (1984) மறைந்தார்.


சகுந்தலா தேவி

🌺 இந்திய பெண் கணித மேதையான சகுந்தலா தேவி 1929ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் பிறந்தார்.

🌺 இவர் ஜூன் 18, 1980ல் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,868,369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, 'கின்னஸ் புத்தகத்தில்' இடம் பெற்றுள்ளது.

🌺 புக் ஆஃப் நம்பர்ஸ், பெர்ஃபெக்ட் மர்டர், ஃபிங்கரிங் : தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ், இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ், அஸ்ட்ராலஜி ஃபார் யூ போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

🌺 ஹ்யூமன் கம்ப்யூட்டர் அதாவது 'மனித-கணினி' என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள் தனது 83வது வயதில் (2013) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.

1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.

1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.

1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

1890 – இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.

1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.

1921 – சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.

1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.

1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

1966 – இத்தாலி, புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.

1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.

1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.

1980 – ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.

1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரான்சியப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2008 – அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.

2010 – கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.

2015 – பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

2015 – தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702)

1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)

1884 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)

1897 – ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)

1906 – ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)

1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)

1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்

1947 – ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)

1957 – டோனி அபோட், ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்

1969 – மேத்திவ் மெக்கானாகே, அமெரிக்க நடிகை

1972 – தபூ, இந்திய நடிகை

1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)

1991 – வித்யுலேகா ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


1918 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)

1920 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)

1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)

1985 – டி. கே. இராமானுஜக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)

1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)

1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)

1991 – மொகிதீன் பேக், இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)

1994 – கு. மா. பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)

1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)

1998 – மரியோன் தொனோவன், அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)

1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926)

2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)

2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)

இன்றைய சிறப்பு நாள்


ஒற்றுமை நாள் (உருசியா)