🌷 1936ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது.


🌷 1950ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர், ஜார்ஜ் பெர்னாட் ஷா மறைந்தார்.


நினைவு நாள் :-


பரிதிமாற் கலைஞர்

✍ தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரையில் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி.

✍ இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம் வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 

✍ தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவர்தான்.

✍ இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 

✍ திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் தனது 33வது 1903ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வயதில் மறைந்தார்.


பிறந்த நாள் :-


மகேந்திரலால் சர்க்கார்.

🌟 சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் 1833ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார்.

🌟 ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோமியோபதிக்கு எதிராக தன் கருத்துகளை பதிவு செய்வதற்காகத்தான் முதலில் அந்த நூலைப் படித்தார். ஆனால், படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்து உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

🌟 1876ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக 'இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்' என்ற அறிவியல் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் முக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல அறிவியல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இந்த அமைப்பு ஒரு களமாகவும் அமைந்தது.

🌟 சிறந்த சமூக ஆர்வலரான மகேந்திரலால் சர்க்கார் தனது 70-வது வயதில் (1904) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.

1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.

1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.

1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.

1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

1868 – இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.

1917 – உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.

1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.

1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.

1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.[2]

1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.

1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.

1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.

1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.

1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.

1984 – அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1999 – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]

2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007 – மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.

இன்றைய பிறப்புகள்


971 – கசினியின் மகுமூது (இ. 1030)

1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)

1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)

1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)

1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)

1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்

1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)

1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)

1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)

1933 – பெ. சு. மணி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2021)

1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்

1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)

1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்

1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்

1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை

1981 – மிட்செல் ஜோன்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்

1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்

இன்றைய இறப்புகள்


1903 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (பி. 1870).

1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து வரலாற்றாளர், கலைக்களஞ்சியத் தொகுப்பாளர், பதிப்பாளர் (பி. 1858).

1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1856)

1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க வேதியியலாளர் (பி. 1884)

1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)

1988 – பி. தாணுலிங்க நாடார், தமிழக அரசியல்வாதி (பி. 1915)

1999 – கு. ச. ஆனந்தன், தமிழக சட்ட அறிஞர், நூலாசிரியர், திருக்குறள் ஆய்வாளர் (பி. 1934)

2004 – தியோ வன் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (பி. 1957)

2004 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளர், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதி (பி. 1918)

2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)

2011 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1947)

இன்றைய சிறப்பு நாள்


கல்லறைத் திருநாள் (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்)

இறந்தோர் நாள், (மெக்சிக்கோ)

இந்தியர் வருகை நாள் (மொரிசியசு)