வேலூர் மாவட்டம் பொன்னையை அடுத்த அணைக்கட்டு பகுதியில், பொன்னை ஆற்றில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அப்பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.