🌸 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த இசைக்கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி மறைந்தார்.


🌸 1972ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.


முக்கிய தினம் :-


சர்வதேச அனிமேஷன் தினம் 


🌹 சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 'சர்வதேச அனிமேஷன் தினம்' கொண்டாடப்படுகிறது.

🌹 1892ல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியூசியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.

🌹 UNESCOவின் ஒரு அங்கமான, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association - ASIFA), 2002ல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.


நினைவு நாள் :-


மாக்ஸ் முல்லர்


✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.

✍ ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.

✍ இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.

✍ இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்' என்று போற்றிய இவர் 76வது வயதில் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பில்கேட்ஸ்

 
🌟 மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் பில்கேட்ஸ் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்காவில் சியாட்டில் என்ற நகரில் பிறந்தார்.

🌟 இவர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1981ஆம் ஆண்டு IBM கணினிகளுக்காக MS-DOS என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தவர் இவர் தான்.

🌟 இதுவரை பில்கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான 'தி ரோடு அஹெட்' என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர். 1999ஆம் ஆண்டு 'பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட்' என்ற நூலை வெளியிட்டார்.


சகோதரி நிவேதிதா 


🌷 சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

🌷 ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

🌷 ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

🌷 வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 43-வது வயதில் (1911) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.

306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.

456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.

1449 – முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.

1492 – கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.

1636 – மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.

1707 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.

1891 – சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.

1904 – பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

1918 – முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து, ஆத்திரியா-அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.

1918 – புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.

1922 – பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.

1942 – கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

1949 – ஏர் பிரான்சு வானூர்தி போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.

1956 – எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

1958 – 23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

1965 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் "கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை" திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.

1990 – ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

1995 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.

2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

2006 – 1930களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

2009 – பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

2014 – நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.

இன்றைய பிறப்புகள்


1466 – எராஸ்மஸ், டச்சு மெய்யியலாளர் (இ. 1536)

1845 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர் (இ. 1888)

1867 – சகோதரி நிவேதிதை, அயர்லாந்து-இந்திய சமூக சேவையாளர், நூலாசிரியர் (இ. 1911)

1892 – மணிலால் காந்தி, மகாத்மா காந்தியின் 2வது மகன், சமூக செயற்பாட்டாளர் (இ. 1956)

1897 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (இ. 1981)

1914 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (இ. 1995)

1933 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (இ. 1983)

1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர்

1955 – இந்திரா நூயி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்

1956 – மகுமூத் அகமதிநெச்சாத், ஈரானின் 6வது அரசுத்தலைவர்

1958 – அசோக் சவான், மகாராட்டிராவின் 16வது முதல்வர்

1967 – ஜூலியா ராபர்ட்ஸ், அமெரிக்க நடிகை

1978 – ஹரின் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி

1979 – ஜவேத் கரீம், யூடியூப்பை அமைத்தவர்களில் ஒருவர்

1984 – பின் விட்டுரோக், அமெரிக்க நடிகர்

1988 – வாணி போஜன், தமிழ் நடிகை

இன்றைய இறப்புகள்


1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)

1704 – ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர், மருத்துவர் (பி. 1632)

1900 – மாக்ஸ் முல்லர், செருமானிய மொழியியலாளர் (பி. 1823)

1978 – ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (பி. 1923)

1981 – பி.ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1886)

1982 – இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன், பிரித்தானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1898)

1983 – போல் சுவிங்சு, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1906)

1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (பி. 1920)

2013 – ராஜேந்திர யாதவ், இந்திய எழுத்தாளர் (பி. 1929)

2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)

2021 – ந. நன்மாறன், தமிழக மார்க்சிய அரசியல்வாதி, பேச்சாளர்

இன்றைய சிறப்பு நாள்


செக்கோ-சிலோவாக் நாடு உருவான நாள் (1918 செக் குடியரசு, சிலவாக்கியா)