🌹 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அசோக் குமார் பீகாரில் உள்ள பாகல்பூரில் பிறந்தார்.


🌹 1792ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.


முக்கிய தினம் :-


சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் 

🌸 ஆண்டுதோறும் சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா.சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

🌸 புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


சகோதரி நிவேதிதா 

🌷 சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

🌷 ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

🌷 ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

🌷 வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 43-வது வயதில் 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


மார்கரெட் ஹில்டா தாட்சர் 

🌼 இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான மார்கரெட் ஹில்டா தாட்சர் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ள கிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.

🌼 இவர் இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

🌼 இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி' என அழைக்கப்பட்டார். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்' என அழைக்கப்பட்டது. இவர் தனது 87வது வயதில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி லண்டனில் மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார்.

1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.

1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.

1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.[1][2]

1644 – சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர்.

1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.

1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.

1881 – இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது.

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.

1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1892 – புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.

1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.[3]

1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.

1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.

1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.[4]

1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.

1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.

1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஏற்பட்ட விபத்தினால் 69 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய அனைத்து 33 சுரங்கத் தொழிலாளரும் மீட்கப்பட்டனர்.

2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.

2014 – இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.

2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.

இன்றைய பிறப்புகள்


1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969)

1908 – புதுவை சிவம், புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989)

1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)

1911 – கு. வன்னியசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1959)

1911 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 2001)

1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013)

1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

1936 – சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996)

1936 – பொ. வே. பக்தவச்சலம், மார்க்சியவாதி (இ. 2007)

1937 – ஏ. எச். எம். பௌசி, இலங்கை அரசியல்வாதி

1947 – அவி லேர்னர், இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்

1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997)

1956 – கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1982 – இயன் தோப், ஆத்திரேலிய நீச்சல் வீரர்

1990 – பூஜா ஹெக்டே, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


54 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (பி. கிமு 10)

1240 – ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205)

1695 – எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)

1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867)

1953 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883)

1956 – சங்கரலிங்கனார், தமிழக செயற்பாட்டாளர், போராளி

1987 – வால்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902)

1987 – கிஷோர் குமார், இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929)

2000 – கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1925)

2015 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)

2016 – 9-ம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1927)

2017 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)

2018 – அன்னபூர்ணா தேவி, இந்துத்தானி இசைக்கலைஞர் (பி. 1927)

2018 – ஜாக்கின் அற்புதம், இந்தியத் தன்னார்வத் தொண்டர் (பி. 1947)

இன்றைய சிறப்பு நாள்


பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்