🌻 1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார்.



முக்கிய தினம் :-


தேசிய தபால் தினம் 

🌟 இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.


உலக மனநல தினம் 

🌷 உலக மனநல மையம் (World Mental Health Federation) சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌷 இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.


உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் 

🌸 குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனை மரண தண்டனையாகும். பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை இல்லை. தற்போது மரண தண்டனையைக் கொண்டுள்ள நாடுகளும் அதை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌸 2002ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி ரோம் நகரில் கூடிய என்.ஜி.ஓ.க்கள் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மரண தண்டனை எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


மனோரமா

ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.

தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா தனது 78வது வயதில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஆர்.கே.நாராயணன் 

🌹 புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் அக்டோபர் 10ஆம் தேதி 1906ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் எழுதிய The guide என்ற புத்தகம் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.

🌹 இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி மறைந்தார்.


ஜெர்ஹார்ட் எர்ல் 

🌺 நவீன புறப்பரப்பு வேதியியல் களத்திற்காகவே அடித்தளமிட்ட ஜெர்ஹார்ட் எர்ல் 1936ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் பிறந்தார்.

🌺 திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக 2007-ம் ஆண்டில் இவரது 71-வது வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.



இன்றைய நிகழ்வுகள்


680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.

1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.

1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.

1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.

1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.

1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.[1]

1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1942 – சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.

1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.

1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.

1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1970 – மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.

1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.

1975 – பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.

1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.

1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.

1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.

1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.

2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.

2015 – துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

2018 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721)

1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810)

1811 – வில்லியம் பிரைடன், பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (இ. 1873)

1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)

1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)

1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930)

1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)

1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991)

1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)

1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001)

1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)

1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008)

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)

1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008)

1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்

1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995)

1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு

1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்

1954 – ரேகா, இந்திய நடிகை

1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002)

1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்

1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


680 – இமாம் உசைன், 3வது சியா இமாம், முகம்மது நபியின் பெயரர் (பி. 626)

827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800)

1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)

1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானிய அறிவியலாளர் (பி. 1687)

1929 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1844)

1930 – அடால்ஃப் எங்கிளர், செருமனிய தாவரவியலாளர் (பி. 1844)

1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)

1973 – லுட்விக் வான் மீசசு, உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)

1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)

1987 – மாலதி, விடுதலைப் புலிகளின் பெண் போராளி (பி. 1967)

1988 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (பி. 1906)

1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர் (பி. 1931)

1997 – டி. ஜெ. அம்பலவாணர், யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)

2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916)

2004 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர் (பி. 1952)

2011 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (பி. 1941)

2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937)

2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931)

2016 – ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940)

இன்றைய சிறப்பு நாள்


மர நாள் (போலந்து)

படைத்துறையினர் நாள் (இலங்கை)

தலைநகர் விடுதலை நாள் (வியட்நாம்)

விடுதலை நாள் (பிஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1970)

விடுதலை நாள் (கியூபா, எசுப்பானியாவிடம் இருந்து, 1868)

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

உலக மனநல நாள்