🌷 1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி (William P.Murphy) மறைந்தார்.


🌷 1879ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விளிம்பு விளைவை கண்டுபிடித்த மேக்ஸ் வோன் உலோ (Max Von Laue) பிறந்தார்.

🌷 1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் (Pieter Zeeman) மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக அஞ்சல் தினம் 

🌸 உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

🌸 1969ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு டோக்கியாவில் நடைபெற்ற போது, அதில் உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாட வேண்டும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


🌷 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மனிதக்குல விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சே குவேரா மறைந்தார்.


பிறந்த நாள் :-


எம்.பக்தவத்சலம் 

🌻 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார்.

🌻 விடுதலைப் போராட்டக்காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தார். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார்.

🌻 இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.

🌻 1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.

🌻 இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் தன்னுடைய 89-வது வயதில் (1987) மறைந்தார்.


கோபபந்து தாஸ் 

🌺 'ஒடிசாவின் மாணிக்கம்' (உத்கல மணி) என்று போற்றப்பட்ட கோபபந்து தாஸ் 1877ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ஒடிசா மாநிலம், பூரி அருகே உள்ள சுவாண்டோ கிராமத்தில் பிறந்தார்.

🌺 'இளைஞர்கள் சுய சார்புடன், சுய சிந்தனை மிக்கவர்களாக, தியாகம் செய்ய முன்வருபவர்களாக, தேசத்தின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்' என்பார். இளைஞர்களிடம் தேசியத்தையும், தேசப்பக்தியையும் வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.

🌺 'குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடு முன்னேற தொழிற்கல்வியே முக்கியம்' என்று வலியுறுத்தினார்.

🌺 மனிதக்குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த கோபபந்து தாஸ் 50-வது வயதில் (1928) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.

1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.

1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.

1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1708 – உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.

1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1760 – ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.

1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.

1806 – புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.

1820 – உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1824 – கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.

1831 – கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.

1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1847 – செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

1854 – உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.

1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1900 – குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.

1934 – யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.

1941 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.

1942 – வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.

1962 – உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.

1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1966 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1980 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.

1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

1983 – ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.

2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

2004 – ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

2012 – பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

இன்றைய பிறப்புகள்


1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)

1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)

1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)

1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)

1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)

1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)

1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)

1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி

1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)

1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)

1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கை மொழியியலாளர்

1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)

1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)

1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்

1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்

1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)

1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)

1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி

இன்றைய இறப்புகள்


892 – இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)

1943 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)

1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)

1967 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)

1974 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)

1987 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)

1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922)

1995 – அலெக் டக்ளஸ் - ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)

2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)

2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1930)

2005 – மதுரை என். கிருஷ்ணன், இந்திய கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)

2006 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (பி. 1934)

2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)

2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)

2018 – தாமசு இசுடைட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1940)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)

விடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)

உலக அஞ்சல் நாள்

தேசிய நானோ தொழில்நுட்ப நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)