🌼 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.



முக்கிய தினம் :-


உலக ஆசிரியர் தினம் 

🌸 மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சி. இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

🌸 ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.


பிறந்த நாள் :-


இராமலிங்க அடிகள்

🌹 சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான 'வள்ளலார்' இராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.

🌹 முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். 'ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்' என எடுத்துக் கூறினார்.

🌹 'சமரச வேத சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். 'கடவுள் ஒருவரே, உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்' என உபதேசித்தார்.

🌹 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணைமிக்க இராமலிங்க சுவாமிகள் 50வது வயதில் (1874) மறைந்தார்.



இன்றைய நிகழ்வுகள்


610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.[1]

816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார்.

1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார்.

1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.

1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

1838 – கிழக்கு டெக்சாசில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.

1910 – போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.

1911 – கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை ஆரம்பமானது.

1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.

1930 – பிரித்தானிய வான்கப்பல் ஆர்101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்சில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.

1938 – நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.

1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1947 – பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.[2]

1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.

1970 – அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.

1988 – சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.

1991 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.

1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2008 – கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.

2011 – மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1524 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564)

1823 – இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)

1864 – லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)

1882 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)

1889 – டிர்க் கோஸ்டர், டச்சு இயற்பியலாளர் (இ. 1950)

1889 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய வானியலாளர் (இ. 1982)

1885 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (இ. 1969)

1907 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)

1911 – ப. கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)

1927 – ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)

1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)

1936 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)

1945 – ரமா பிரபா, தென்னிந்தியத் தெலுங்கு நடிகை

1946 – கோ. கேசவன் தமிழக எழுத்தாளர் (இ. 1998)

1950 – வி. வைத்தியலிங்கம், புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்

1952 – இம்ரான் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி

1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)

1965 – கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)

1975 – கேட் வின்ஸ்லெட், ஆங்கிலேய நடிகை

இன்றைய இறப்புகள்


1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)

1805 – காரன்வாலிஸ், ஆங்கிலேய இராணுவ அதிகாரி, அரசியல்வாதி (பி. 1738)

1813 – டிக்கம்சா, அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1768)

1938 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (பி. 1905)

1942 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1861)

1960 – அல்பிரட் எல். குறோபெர், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1876)

1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)

1976 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1912)

1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)

2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலாளர் (பி. 1913)

2011 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (பி. 1955)

2015 – திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)

இன்றைய சிறப்பு நாள்


உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4-10)

உலக ஆசிரியர் நாள்

குடியரசு நாள் (போர்த்துகல்)

பால்வினைத் தொழிலுக்கு எதிரான பன்னாட்டு நாள்