சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. காட்பாடி முன்னதாக சேவூர் பகுதியில் வந்தபோது, ரயில் பாதையில் இருந்த மின் வயர் அறுந்து விழுந்தது. இதனால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் உடனே மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து, மின் வயர் அறுந்த இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர் கள் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின் னர் அறுந்துகிடந்த மின் வயரை இணைத்து சரி செய் தனர். இதனால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஒன்றரை மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
மேலும், மின் பாதையை சரி செய்யும் வரையில் லால்பாக், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள் ளிட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.