ராணிப்பேட்டை நவல்பூர் புதுத்தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (70). தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் விக்னேஷ் (29). பெயின்டர் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர் கடந்த 7ம் தேதி இரவு தனது அறையில் தூக்கு மாட்டிக்கொண்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா . அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விக்னேஷ் நேற்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Source : Dinamalar