👉 1835ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது.

🎬 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார்.

🌆 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா மறைந்தார்.


முக்கிய தினம் :-

சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்
👥 சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

👥 யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

நினைவு நாள் :-

ஜெ.ஜெ.தாம்சன்
🌹 நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் 1856ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்ற இடத்தில் பிறந்தார்.

🌹 இவர் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1906ஆம் ஆண்டு மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🌹 பல பரிசுகள் பெற்று சிறந்து விளங்கிய தாம்சன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி தன்னுடைய 83வது வயதில் (1940) மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


பிறந்த நாள் :-

ரூதர்ஃபோர்டு
💥 நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.

💥 இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.

💥 இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். கதிரியக்கத்தின் மிக முக்கிய அம்சமான எரியாற்றல் குறித்தும் ஆராய்ந்தார். இது, வேதியியல் வினைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றலைவிட அதிகம் என்று நிரூபித்தார். இதன்மூலம் அணு ஆற்றல் என்ற முக்கியக் கோட்பாட்டை உருவாக்கினார்.

💥 கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

💥 அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்துக்கும் அடித்தளமாக விளங்குகின்றன. அணுக்கரு இயற்பியலின் தந்தை என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு தனது 66-வது வயதில் (1937) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]

1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.

1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.

1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1799 – இரண்டாவது கூட்டமைப்புப் போரில், நெதர்லாந்தின் முழுக் கடற்படைக் கப்பல்களையும் பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.

1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.

1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.

1917 – வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.

1940 – இரண்டாவது வியென்னா உடன்பாட்டின் படி, உருமேனியாவின் வடக்கு திரான்சில்வேனியா பகுதி வின் அங்கேரிக்கு வழங்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.

1945 – வியட்நாமில் ஆகத்துப் புரட்சி முடிவுக்கு வந்தது. நியூவென் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பாபோ டாய் முடிதுறந்தார்.

1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.

1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் மக்கள் முஜாகுதீன் குழுவினர் நடத்திய குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.

1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 – ஈழத்துப் பெண்ணிலைவாதியும் கவிஞருமான செல்வநிதி தியாகராசா யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.

1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2002 – பிரேசிலில் வானூர்தி ஒன்று ரியோ பிராங்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 31 பேரில் 23 பேர் உயிரிழந்தனர்.[2]

2008 – ஈழப்போர்: கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.

2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.

இன்றைய பிறப்புகள்


1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)

1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)

1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)

1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)

1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)

1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)

1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)

1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)

1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)

1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)

1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்

1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்

1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி

1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி

1958 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 2006)

1963 – ஆனந்த் பாபு, தமிழகத் திரைப்பட நடிகர்

1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை

1976 – சித்ராங்கதா சிங், இந்திய நடிகை

1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை

1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்

இன்றைய இறப்புகள்


1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)

1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)

1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)

1773 – பேஷ்வா நாராயணராவ், மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் (பி. 1755)

1844 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1774)

1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)

1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)

1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)

1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)

1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)

1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)

1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937)

2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)

2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)

2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)

2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)

2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918)

2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)

2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)

2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)

இன்றைய சிறப்பு நாள்


அனைத்துலக காணாமற்போனோர் நாள்

விடுதலை நாள் (தர்தாரிஸ்தான்)

வெற்றி நாள் (துருக்கி)

அரசியலமைப்பு நாள் (துர்கசு கைகோசு தீவுகள்)

லீமா நகர ரோசின் நாள் (பெரு)