🌍 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் நீல்ஆம்ஸ்ட்ராங் மறைந்தார்.


🌍 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிக அருகில் சென்றது.

🌍 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்கு அருகில் சென்றது.

🔭 1609ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.

🔋 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் மைக்கல் பாரடே மறைந்தார்.

💣 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கதிரியக்கத்தை கண்டுபிடித்த ஹென்றி பெக்கெரல் மறைந்தார்.


நினைவு நாள் :-


ஜேம்ஸ் வாட்

🌹 பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

🌹 இவருக்கு சிறு வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

🌹 இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.

🌹 இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

🌹 இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.

🌹 இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1819ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி 83 வயதில் (1819) மறைந்தார்.

பிறந்த நாள் :-


கிருபானந்த வாரியார்


✋ சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.

✋ இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

✋ குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

✋ வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

✋ செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87வது வயதில் (1993) விமானப் பயணத்தின் போது மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார்.

1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார்.

1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது.

1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார்.

1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1732 – யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.[1]

1758 – ஏழாண்டுப் போர்: புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் உருசிய இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.

1795 – திருகோணமலையை பிரித்தானியர் இடச்சுக்களிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர்.[2]

1803 – யாழ்ப்பாணம் பனங்காமப் பற்று மன்னன் பண்டாரவன்னியன் கண்டியர்களின் உதவியுடன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினான். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.[1]

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

1823 – அமெரிக்க தேடலியலாளர், விலங்கின் மென்மயிர் வணிகர் இயூ கிளாசு தெற்கு டகோட்டாவில் தேடலுக்குச் சென்ற போது கொடுங்கரடியினால் தாக்கப்பட்டார்.

1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

1830 – பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது.

1875 – ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.[3]

1894 – அரையாப்பு நோய்க்கான தொற்றுக் கிருமியை கிடசாடோ சிபாசாபுரோ கண்டுபிடித்தார்.

1898 – கிரேக்கத்தில் துருக்கியக் கும்பலால் 700 பொது மக்கள், 17 பிரித்தானியக் காவலர்கள், கிரீட் நகர பிரித்தானியத் தூதர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

1914 – முதலாம் உலகப் போர்: சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்சியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் செருமனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.

1920 – போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகத்து 13 இல் ஆரம்பித்த போர் செஞ்சேனையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

1933 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர்.

1939 – ஐக்கிய இராச்சியமும் போலந்தும் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தின.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் முதல் தடவையாக பெர்லின் மீது குண்டுகளை வீசியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிசு விடுவிக்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே பனிப்போரின் முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது.

1950 – வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.

1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

1961 – எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த யானியோ குவாத்ரோசு பிரேசிலின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

1967 – அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் ஒறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.

1980 – சிம்பாப்வே ஐக்கிய நாடுகள் அவை.யில் இணைந்தது.

1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.

1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக்க் கிட்டவாகச் சென்றது.

1991 – லினசு டோர்வால்டுசு லினக்சு இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

2001 – பகாமாசில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி ஆலியாவும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.

2003 – மும்பையில் இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – உக்ரைனின் முன்னாள் பிரதமர் பாவ்லோ லசரென்கோ ஊழல் குற்ரச்சாட்டுகளுக்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டை பெற்றார்.

2007 – இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.

2017 – 2017 அரியானா கலவரம்: இந்தியாவில் அரியானா மாநிலத்தில் தொடங்கிய வன்முறைகள் பஞ்சாப், புதுதில்லிக்கும் பரவியதில், 36 பேர் உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1530 – நான்காம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1584)

1887 – செல்லப்பா குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி

1903 – அர்பத் எலோ, அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், எலோ தரவுகோள் முறையை அறிமுகப்படுத்தியவர் (இ. 1992)

1905 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (இ. 1938)

1906 – கிருபானந்த வாரியார், சமயச் சொற்பொழிவாளர் (இ 1993)

1906 – கிட்டப்பா, நடிகர், பாடகர் (இ. 1933)

1911 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தலைவர் (இ. 2013)

1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி

1930 – சான் கானரி, இசுக்கொட்டிய நடிகர்

1931 – எம். கே. அர்ஜுனன், கேரளத் திரைப்பட இசையமைப்பாளர்

1938 – பிரெட்ரிக் போர்சித், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்

1945 – ராம் புனியானி, இந்திய உயிரிமருத்துவர்

1952 – விஜயகாந்த், தமிழக நடிகர், அரசியல்வாதி

1952 – துலிப் மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்

1955 – ஹனி இரானி, இந்தியத் திரைப்பட நடிகை

1957 – எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி

1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்

1964 – அஸ்மின் அலி, மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி

1973 – நித்யஸ்ரீ மகாதேவன், கருநாடக இசைப் பாடகி

1976 – ஜாவித் கதீர், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1987 – மோனிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய இறப்புகள்


79 – மூத்த பிளினி, உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. 23)

1636 – பாய் குருதாஸ், பஞ்சாபிக் கவிஞர் (பி. 1551)

1776 – டேவிடு யூம், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1711)

1819 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1736)

1822 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1738)

1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1791)

1900 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1844)

1908 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1852)

1919 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1840)

1938 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி (பி. 1870)

1971 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1883)

1981 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1901)

2001 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1979)

2001 – மட்கே ஜெர்ட்ரூடே ஆடம், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1912)

2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)

2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1932)

2012 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)

2012 – வி. கே. லட்சுமணன், தமிழக அரசியல்வாதி (பி. 1932)

2018 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1936)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (உருகுவை, பிரேசிலிடம் இருந்து 1825)

விடுதலை நாள் (பிரான்சு)