🔷 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

🔥 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி மகாத்மா காந்தி அன்னியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தை தொடங்கினார்.

👉 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

📺 1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதனை செய்தது.

🏁 1818ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியாவின் 1வது தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் மறைந்தார்.

🏁 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே மறைந்தார்.


முக்கிய தினம் :-


சென்னை தினம்

🎪 பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று 384-வது பிறந்த நாள்.

🎪 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.

🎪 பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

🎪 முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிறந்த நாள் :-


ரே பிராட்பரி

✍ அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள வாகிகன் நகரில் பிறந்தார்.

✍ இவர் முழு நேர எழுத்தாளராக 1943-ல் மாறினார். 'டார்க் கார்னிவல்' என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பு 1947-ல் வெளிவந்தது. 1950-ல் இவரது பல கதைகள் 'ஈ.சி. காமிக்ஸ்' நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.

✍ 1953-ல் வெளியான இவரது 'ஃபாரன்ஹீட் 451' புதினம் உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு 'பிராட்பரி லேண்டிங்' என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

✍ இவர் தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்து வந்த ரே பிராட்பரி 91வது வயதில் (2012) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது.

1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.

1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.

1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1654 – பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.

1711 – கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர்.

1717 – எசுப்பானியப் படைகள் சார்தீனியாவில் தரையிறங்கின.

1770 – ஜேம்ஸ் குக் (இன்றைய குயின்சுலாந்தில் உள்ள) பொசெசன் தீவை அடைந்து அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரி ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை அனைத்துக்கும் நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1780 – கப்டன் ஜேம்ஸ் குக்கின் ரெசொலூசன் கப்பல் இங்கிலாந்து திரும்பியது. (குக் அவாயில் கொல்லப்பட்டார்).

1791 – எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது.

1798 – ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர்.

1827 – பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1849 – ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.

1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.[1]

1872 – இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

1875 – சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக உருசியாவுக்கும் சப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911 – பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி படைகள் உருசியாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.

1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, யப்பான், இத்தாலி]] மீது பிரேசில் போர் தொடுத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் செருமானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.

1949 – கனடாவில் குவீன் சார்லட் தீவுகளில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1953 – பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.

1962 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1968 – திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.

1972 – ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1981 – சீன குடியரசில் வானூர்தி ஒன்று வானில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 110 பேரும் உயிரிழந்தனர்.[2]

1985 – பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.

1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

2004 – நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.

2006 – கிழக்கு உக்ரைனில் உருசிய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.

2006 – கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக அவருக்கு பீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.

2012 – கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1823 – லூயிசு மார்ட்டின், பிரெஞ்சுக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1894)

1834 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1906)

1877 – ஆனந்த குமாரசுவாமி, இலங்கை வரலாற்றாளர், மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1947)

1902 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை (இ. 2003)

1904 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (இ. 1997)

1920 – ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)

1924 – ஹரிசங்கர் பரசாயி, இந்திய எழுத்தாளர் (இ. 1995)

1927 – டி. ஜி. லிங்கப்பா, திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2000)

1955 – சிரஞ்சீவி, இந்திய நடிகர், அரசியல்வாதி

1971 – ரிச்சர்ட் ஆர்மிட்டேச், ஆங்கிலேய நடிகர்

1975 – ரோட்ரிகோ சாண்டோரோ, பிரேசில் நடிகர்

1978 – ஜேம்ஸ் கோர்டன், ஆங்கிலேய நடிகர், எழுத்தாளர்

1991 – பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலிய கால்பந்து வீரர்

இன்றைய இறப்புகள்


1485 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452)

1664 – மரியா கூனிட்சு, போலந்து வானியலாளர் (பி. 1610)

1818 – வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவின் 1வது தலைமை ஆளுநர் (பி. 1732)

1904 – கேட் சோப்பின், அமெரிக்க புதின எழுத்தாளர் (பி. 1850)

1949 – கஜானான் யஷ்வந்த் சிட்னிஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1900)

1967 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903)

1973 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1929).

1982 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி (பி. 1914)

1986 – சோபா சிங், இந்திய ஓவியர் (பி. 1901)

1988 – ந. சஞ்சீவி, தமிழக இன உணர்வாளர், சமுதாயச் சிந்தனையாளர், அறிவியல் கோட்பாட்டாளர் (பி. 1927)

1994 – கேரி ஜாஸ்கூர், அமெரிக்க நடிகர் (பி. 1935)

2010 – ஏ. கே. வீராசாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

2011 – யக் லேற்ரன், கனடிய அரசியல்வாதி (பி. 1950)

2014 – உ. இரா. அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)

2016 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1924)

இன்றைய சிறப்பு நாள்


சென்னை நாள் (தமிழ்நாடு)