👉 1000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

👉 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் ஈரோ சாரினென் பின்லாந்தில் பிறந்தார்.

👉 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

👉 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

முக்கிய தினம் :-


உலக கொசு ஒழிப்பு தினம்

👉 உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரத்தை பேணுவோம், நோயின்றி வாழ்வோம் என கொசு ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.


பிறந்த நாள் :-


என்.ஆர்.நாராயண மூர்த்தி

🏢 இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.

🏢 இவர் 1981-ல் மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்' மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே பெங்கள10ரில் தன் அலுவலகத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கியது. அதுவே இதன் தலைமை அலுவலகமாக மாறியது.

🏢 இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கவுரவம் மிக்க 'ஹூவர் பதக்கம்' வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. நேர்மை, எளிமை, உண்மையை தன் வாழ்க்கையில் பின்பற்றுபவர்.

🏢 இந்தியா தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லரசாக திகழ்வதற்கு காரணமாக திகழ்பவர் நாராயணமூர்த்தி தான் என்று போற்றப்படுகிறார்.

ராஜீவ் காந்தி

🏁 இந்தியாவின் 6வது பிரதமர் மற்றும் அரசியல்வாதியான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🏁 இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.

🏁 இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 1991ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இன்றைய நிகழ்வுகள்


14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.

636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.

917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.

1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.

1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1191 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 – அத்திலாந்திக்கு என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.

1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1910 – அமெரிக்காவின் வடகிழக்கு வாசிங்டன், வடக்கு ஐடகோ, மேற்கு மொன்ட்டானா ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை செருமனி கைப்பற்றியது.

1917 – இலங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் 168 போர்க் கைதிகள் செருமனியின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன.

1955 – மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.

1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.

1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1988 – வட அயர்லாந்தில் பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் ஐஆர்ஏ போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

1989 – தேம்சு ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.

1991 – மாஸ்கோவில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1995 – இந்தியா, பிரோசாபாத் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.

1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2006 – ஈழப்போர்: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.

2006 – ஈழப்போர்: நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிவமகராஜா தெல்லிப்பழையில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008 – எசுப்பானியா, மத்ரித் நகரில் பராகாசு விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

2014 – சப்பானில் இரோசிமா நகரில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 72 பேர் உயிரிழந்தனர்.

2016 – துருக்கியின் காசியான்டெப் நகரில் குர்தியத் திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்,

இன்றைய பிறப்புகள்


1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)

1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)

1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)

1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)

1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)

1933 – செ. மாதவன், தமிழக அரசியல்வாதி (இ. 2018)

1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)

1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்

1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்

1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை

1981 – பென் பார்னெஸ், ஆங்கிலேய நடிகர்

1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்

1984 – மதுமிதா, இந்திய நடிகை

1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை

இன்றைய இறப்புகள்


984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)

1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)

1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)

1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)

1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)

1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)

1939 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1845)

2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)

2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)

2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])

2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)

2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)

2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)

2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)

2017 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர் (பி. 1926)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)

உலகக் கொசு நாள்

மத நல்லிணக்க தினம் (இந்தியா)