📖 610ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முகம்மது நபி, குர்ஆனை பெற்ற தினம்.


💣 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு, இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

👉 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மிசௌரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

🌃 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய வானியலாளர் வைணு பாப்பு சென்னையில் பிறந்தார்.


பிறந்த நாள் :-


வி.வி.கிரி

🏁 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார்.

🏁 1914-ல் காந்தியை சந்தித்த பிறகு, சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார்.

🏁 1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

🏁 அதன்பின் குடியரசுத் துணைத் தலைவர் (1967), குடியரசுத் தலைவர் (1969 இடைக்காலப் பதவி), அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார்.

🏁 இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் தனது 86-வது வயதில் (1980) மறைந்தார்.


சாவி

✍ தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான 'சாவி' (சா.விஸ்வநாதன்) 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் பிறந்தார்.

✍ எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. எனவே 'விடாக்கண்டர்' என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் 'கல்கி' ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.

✍ பிறகு 'சாவி' என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய 'மாறுவேஷத்தில் மந்திரி', 'சூயஸ் கால்வாயின் கதை' உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

✍ படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாவி தனது 85-வது வயதில் (2001) மறைந்தார்.


இன்றைய நிகழ்வுகள்


610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.

654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார்.

955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்.

1519 – மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன.

1680 – நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.

1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார்.

1755 – பிரித்தானிய இராணுவனர் அகாடியர்களை நோவா ஸ்கோசியாவில் இருந்து பதின்மூன்று குடியேற்றங்களுக்கு கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் செய்தி இலண்டனை வந்தடைந்தது.

1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

1793 – இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.

1802 – இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது.[1]

1809 – கித்தோ, (இன்றைய எக்குவடோரின் தலைநகரம்) எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இக்கிளர்ச்சி 1810, ஆகத்து 2-இல் அடக்கப்பட்டது.

1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1846 – சிமித்சோனிய நிறுவனம் அமெரிக்க சட்டமன்றத்தால் அங்கீகாரம் பெற்றது.

1856 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

1904 – உருசிய-சப்பானியப் போர்: உருசியப் படைகளுக்கும் சப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

1905 – உருசிய-சப்பானியப் போர்: இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுகள் அமெரிக்காவில் நியூ ஹாம்சயர், போர்ட்ஸ்மவுத் நகரில் ஆரம்பமாயின.

1913 – இரண்டாம் பால்க்கன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, பல்காரியா, உருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1920 – முதலாம் உலகப் போர்: உதுமானிய சுல்தான் ஆறாம் மெகுமதுவின் பிரதிநிதிகள் உதுமானியப் பேரரசை கூட்டுப் படைகளின் நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1932 – 5.1 கிகி எடையுள்ள விண்வீழ்கல் ஒன்று ஏழு துண்டுகளாக வெடித்து அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் ஆர்ச்சி என்ற நகருக்கருகில் வீழ்ந்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி சப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

1953 – முதலாவது இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியம் வியட் மின்ன்னுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது படைகளை மத்திய வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.[2]

1966 – கனடா, ஒட்டாவா நகரில் எரோன் வீதிப் பாலம் உடைந்ததில் ஒன்பது தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

1993 – நியூசிலாந்து, தெற்குத் தீவை 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2001 – அங்கோலாவில் தொடருந்து ஒன்று தாக்கப்பட்டதில் 252 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – திருகோணமலையில் சேருவிலை பகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாகக் குண்டுகள் வீசியதில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2009 – சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

2014 – தெகுரான் நகரில் மெகுரபாது வானூர்தி நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1755 – பேஷ்வா நாராயணராவ், மராட்டியப் பேரரசின் 5-வது பேசுவா (இ. 1773)

1860 – விஷ்ணு நாராயண் பாத்கண்டே, இந்துஸ்தானி இசைக்கலைஞர் (இ. 1936)

1894 – வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1980)

1916 – சாவி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2001)

1926 – கண்பத்ராவ் தேஷ்முக், இந்திய அரசியல்வாதி

1927 – வைணு பாப்பு, இந்திய வானியலாளர் (இ. 1982)

1930 – க. துரைரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1995)

1944 – எம். ஏ. நுஃமான், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்

1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி

1951 – குவான் மானுவல் சந்தோசு, கொலம்பியாவின் 59வது அரசுத்தலைவர்

1963 – பூலான் தேவி, இந்திய அரசியல்வாதி (இ. 2001)

1980 – ரொக்சான் மெக்கி, கனடிய-ஆங்க்லேய நடிகை

இன்றைய இறப்புகள்


258 – புனித லாரன்சு, எசுப்பானிய-இத்தாலியப் புனிதர் (பி. 225)

1790 – பிலிப்பு தெ மெல்லோ, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1723)

1896 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (பி. 1848)

1945 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1882)

2002 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (பி. 1913)

2011 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (பி. 1921)

2014 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (பி. 1912)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (எக்குவாடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1809)