Swami darshan by Collector Bhaskara Pandyan's family on the occasion of Krishna Jayanti

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த விஜய் மன்னர்களால் கட்டப்பட்ட சந்தான வேணுகோபால் சுவாமி ஆலயத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது குடும்பத்துடன் ஆலயத்திற்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அருகே உள்ள கோசாலை சென்ற அவர் அங்கு உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை பழங்கள் ஆகியவை ஆட்சியரும் அவர் குடும்பத்தாரும் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் சிலர் ஆட்சியரை சந்தித்து கல்லூரி சேர்வதற்கான கோரிக்கையை ஆட்சியரிடம் கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக கல்லுரி நிர்வாகத்திடம் பேசுகிறேன் என்று தெரிவித்தார்.