Mesthiri killed when a bike collided with a lorry

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் பூண்டி ரோட்டில் வசித்து வந்தவர் ரமேஷ் மகன் ஜெகதீசன்(22). கட்டட மேஸ்திரி. திருமணமாகாதவர். நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுமான பணிக்காக வீட்டுமனை ஒன்றை பார்ப்பதற்காக பைக்கில் வாலாஜாவில் இருந்து ஆற்காடு நோக்கி சென்றார்.

ராணிப்பேட்டை பைபாஸ் ரோடு புதிய மேம்பாலம் மீது சென்றபோது முன்னால் சென்ற லாரி தாறுமாறாக சென்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் நிலை தடுமாறிய ஜெகதீசனின் பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் அதே இடத்தில் இறந்தார். 

இதுகுறித்து ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.