Deer hunter arrested in Ammur forest, 3 Persons escaped 1 Gun and 3 Bikes Ceased 

அம்மூர் காப்புக்காட்டில் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையியலான வனத்துறையினர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காப்புக்காட்டில் ஆண் மான் ஒன்றை வேட்டையாடி, கறியாக்கி பங்கு போட்டுக் கொண்டிருந்த 4 பேர், வனத்துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

அதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடினர். பிடிபட்ட நபரிடம் விசாரித்ததில், அவர் திருவலம் அடுத்த ராமநாத புரத்தைச் சேர்ந்த சஞ்சீவி (35) என்று தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டையாடியவர்கள் பயன்படுத்திய மூன்று பைக்குகள், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.