7-year-old girl killed in school van collision

நாகவேடு கிராமம் அடுத்த கீழாந்துறை பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் அரக்கோணம் பகுதியில் பிளம்பராக வேலை செய்து வருகிறார்.

இவரது மகள் சிவானி ஸ்ரீ (எ) கிரேசி(7). இவர் சம்பத்ராயன் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர், அருகே உள்ள டியூஷன் சென்டருக்கு படிக்க சென்றுள்ளார்.

ரோட்டை கடக்கும் போது நெமிலி அடுத்த சயனபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேனை ஓட்டி வந்த வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜான்(54) என்பவர் அதி வேகமாக வந்து குழந்தை மீது மோதினார். இதில் கிரேசி துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு நெமிலி தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.