16 firefighters who participated in the training were infected with corona virus


வாலாஜா சுங்கச்சாவடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூயில் தீயணைப்பு மீட்புப்பணிக்கான 136- வது பயிற்சி கடந்த ஜூன் 9-ம் தேதி தொடங்கியது. 

இதில் புதியதாக தேந்தெடுக்கப்பட்ட 145 வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு வீரர்க்கு கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த தாக கூறப்படுகிறது.

அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது.

உடனடியாக அவர் ஒரு தனி அறையில் தனி மைப்படுத்தப்பட்டார். தொடந்து அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதது. 

இதில் 15, பேருக்கு கொரானா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர்கள் அனைவரும் மற்றொரு பகுதியில் தனி மைபடுத்தப்பட்டனர்.