ராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பணி துவக்கினார்.
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய கலெக்டர் பேசியதாவது: முதல்வர் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இந்த பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து துறை அலுவலகங்களும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலவலகத்துக்கு குறைகள் தீர்க்க வருகை தரும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்களும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உறுதிசெய்ய வேண்டும். 

புதிய அலுவலகத்தில் பணியாற்றும்போது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். அரசு மக்களின் பிரச்னைகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனை உரிய முறையில் பயன்படுத்தி,அனைவரும் ஒன்றிணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் பணியாற்ற வேண்டும்" இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உத வியாளர் சுரேஷ், துணை கலெக்டர்கள், தாசில்தார் கள் துறைசார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.