Pakiranga death threat: Anandhalai VAO takes shelter from police

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் அதியமான். அனந்தலை வி. ஏ. ஓவாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அதியமானின் தம்பியான தனஞ்செழியன், மனைவியின் உறவினர் காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுகுமார் மற்றும் சிலரிடம் வட்டிக்கு 80 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட பிரச்சனையை சமரசம் செய்ய அதியமான் சென்றுள்ளார்.  சமரசம் செய்ததால் நீ தான் பணத்தை திரும்பத் தர வேண்டுமென அதியமானின் தம்பி மனைவியின் உறவினர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல பணத்தை தராவிட்டால், நீ எஸ். பி அலுவலகம் அல்லது நீ வேலை செய்யும் இடம் என எங்கு இருந்தாலும் தேடி வந்து உன்னை வெட்டுவேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனால் அச்சமடைந்த அதியமான் தனது மனைவி, 3 வயது மகளுடன் நேற்று (14. 07. 2022) கண்ணீர் மல்க பாதுகாப்பு கேட்டு ராணிப்பேட்டை எஸ். பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து புகார் கொடுத்தனர். புகாருடன் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ ரெக்கார்டையும் கொடுத்துள்ளனர்.