DMK  Petition for union elections should be submitted by 5th - Minister Gandhi statement
திமுக 15வது பொதுத்தேர்தல் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நடைபெற்று வருகிறது. 

இதுதொடர்பாக ராணிப்பேட்ட மாவட்ட திமுக செயலாளர் காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

வேலூர் கிழக்கு மாவட்டத்தில் அரக்கோணம் கிழக்கு, அரக்கோணம் மேற்கு, அரக்கோணம் மத்திய, நெமிலி கிழக்கு, நெமிலி மத்திய,, நெமிலி மேற்கு, காவேரிப்பாக்கம் தெற்கு, காவேரிப்பாக்கம் வடக்கு, சோளிங்கர் கிழக்கு, சோளிங்கர் மத்தியம், சோளிங்கர் கிழக்கு ஆற்காடு கிழக்கு, ஆற்காடு மேற்கு, வாலாஜா கிழக்கு, திமிரி கிழக்கு, திமிரி மேற்கு மற்றும் கணியம்பாடி ஒன்றியங்களில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளோர் இம்மாதம் 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீதரனிடம் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். 

இவாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.