Vellore, Alamelurangapuram: Brain dead person's body organs donated!

வேலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் அலமேலுரங்காபுரம் அடுத்த புதுவசூர் பேங்க்நகரைச் சேர்ந்தவர் பிரகாஷம்(வயது66). இவரது மனைவி பெயர் கலா. இவர்களுக்கு பாலாஜி மற்றும் ராஜசேகரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில், ராஜசேகரன் மத்திய பிரிவு போலீசில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெருமுகை பகுதியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிரகாஷம் படுகாயம் அடைந்தார். அவரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷம் நேற்று மாலை மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, பிரகாஷத்தின் கல்லீரல் மற்றும் கண்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டன.

இரண்டு சிறுநீரகங்கள் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.