₹17 lakh fraud, BDO Karthikeyan and 8 panchayat secretaries suspended by collector
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்டு 40 ஊராட்சிகள் உள்ளன. சோளிங்கர் ஒன்றியத்தில் பணியாற்றி வரும் குருவராஜபேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை பிடிஓவாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், துணை பிடிஓ கார்த்திகேயன் தலங்கை, கூடலூர், சூரை, வயல்பாடி, மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், கோவிந்தசேரி, ஆயல், கல்லாலங்குப்பம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களாக பணியாற்றி வந்தவர்களுடன் சேர்ந்து அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டிய பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட 8 ஊராட்சி செயலர்களுக்கு பணம் வழங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் ₹17 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துணை பிடிஓ கார்த்திகேயன் மற்றும் 8 ஊராட்சி செயலர்களை சஸ்பெண்ட் செய்து நேற்று அதிரடி உத்தரவிட்டார்.