A bus collided with a container lorry In Vellore - the driver was killed!  17 people were seriously injured!!

நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பஸ் மோதியது. அதில் டிரைவர் பலியானார். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர் அருகே இவ்விபத்து பற்றிய விவரம் வருமாறு:
பெங்களூரிலிருந்து சென்னைக்கு மளிகை பொருட்கள் ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அது வேலூர் அருகே மேல் மொனவூர் என்ற இடத்தில் பழுதாகி நின்றது.

அப்போது சேலத்தில் இருந்து வேலூருக்கு வந்த ஒரு அரசு பஸ் நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர்லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் பஸ் கடும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் பஸ்டிரைவர் மாதப்பன் (வயது 53) மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 8 பேர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் மாதப்பன் உள்பட 10 பேர் வேலூர் அடுக்கம் பாறை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவருக்கும் தீவிரசிகிச்சை அளிக்கப் படுகிறது. இவ்விபத்தில் பலியான டிரைவர் தேன்கனிக்கோட்டை  அருகே உள்ள உடையந்ததல்லி என்றகிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.