Startup TN is proud to launch a series of initiatives for women entrepreneurship.  These projects will be implemented under the beautiful Tamil name of "தொழிலணங்கு".

Thozilanangu scheme for women


தமிழ்நாடுதொழில் மற்றும் புத்தக இயக்கம் சார்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொழிலணங்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அறிவித்தார்.

தமிழகத்தில் பெண்களை சுயதொழில் முனைவோராக கொண்டுவர வேண்டும் என்பது முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்று.

இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானது இதனால் அறிவிப்பு வெளியான மூன்றே மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது மகிழ்ச்சியான திட்டம் என அவர் கூறியிருக்கிறார் இந்த நிலையில் இதுகுறித்து.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷனின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சிவராஜா ராமநாதன் பெண்களுக்கான இந்த திட்டங்களை தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறது இந்த அரசு.

இந்த திட்டங்கள் மூலம் பல்வேறு சுயதொழில் கொண்ட பெண்களை ஊக்குவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடைய நோக்கம் என்ன


இந்த திட்டத்தில் சுய உதவி குழுக்களின் செயல் முறையை முற்றிலும் மாற்றி அதன் உறுப்பினர்களை ஆக்கபூர்வமான தொழில்முனைவோர்கள் ஆக மாற்றுவது.

இந்த முயற்சி நோக்கம், இதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து குழுக்களில் (SMART SHG) இருந்து உருவாகும், தொழில் முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்ய வரும்.

பல்வேறு முயற்சிகள் என்ன


தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றவும் பல்வேறு முயற்சிகளை.

தமிழ்நாடு அரசு ஸ்டார்ட்அப் இந்நோவேஷன் மிஷன் என்ற அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில்.

தமிழக அரசும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில்முனைவோருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

கவனம் பெற்ற சிறந்த திட்டம்


ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப்களின் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்து ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடமிருந்து 50 லட்சம் வரை அவர்களின் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்ய இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

அரசுக்கு முக்கிய கோரிக்கை


இந்த திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவித்த பிறகு.

முதல்வரிடம் இத்தகைய நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

தொழில் முனைவர்கள் அதிக அளவில் வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு


அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கொள்முதல் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு.

தற்போது நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை சார்பில் கொள்முதல் மேற்கொள்ள 25 நிறுவனங்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்


இது புதிதாக தொழில் தொடங்க உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் தமிழக இளைஞர்களுக்கும் கட்டாய பயனளிக்கும்.

இதனால் கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் என அவர் அறிவித்துள்ளார்.

Thozilanangu program has been launched on behalf of the Tamil Nadu Entrepreneurship and Innovation Movement with the aim of promoting female.