ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வைலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் முரளி (வயது 32). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

கடந்த 14-ந் தேதி விடுமுறையில் மயிலம்பாடிக்கு வந்தார். இவரது மாமியார் வீடு சோளிங்கரில் உள்ளது. இவர் மாமியார் வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் கூடலூர் நெடுஞ்சாலையில் வரும்போது அங்கிருந்த வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் அதில் ஏறி இறங்கி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று இரவு சேர்த்தனர், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.