கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் பாலசுப்பிரமணி பானுமதி(70). இவர் தனியாக வசித்து வருகிறார். பானுமதிக்கு சிலநாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் பார்த்து தீயை அணைத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது மகள் பஞ்.துணைத்தலைவர் உமா போலீசில் புகார் அளித்தார். கலவை போலீ சார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.