ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை 26 ஜூன் 2022 அன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 54041 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
இதுவரை 53184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர்
70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகள் அறிவிப்பு : மீண்டும் அமலாகிறது ஊரடங்கு?


தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தி வருவதால், மாநிலம் முழுதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.