👉 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனுக்கு அருகில் பிறந்தார்.

👉 1897ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

👉 உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26ஆம் தேதி 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மேலும், 1970ஆம் ஆண்டு இதே நாளில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது.

👉 இத்தினம் மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் கொண்டாடப்படுகிறது.


நினைவு நாள் :-


இராமானுஜன்

🌟 இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

🌟 இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

🌟 இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.

🌟 இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (Magic Squares), தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.

🌟 ராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

🌟 1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

🌟 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தனது 32வது வயதில் மறைந்தார்.


பிறந்த நாள் :-


குருதத்த வித்யார்த்தி

🌷 ஆரியசமாஜத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டிட் குருதத்த வித்யார்த்தி (Gurudatta Vidyarthi) 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் பிறந்தார்.

🌷 லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் இவருடைய நெருங்கிய நண்பர்கள். இவர் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்ததால் அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்ப்பார்.

🌷 இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு பிரியமான சீடரானார். பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை 'வித்யார்த்தி' (மாணவன்) என்றே கூறிக்கொள்வார்.

🌷 இவரின் 'எ டெர்மினாலஜி ஆஃப் தி வேதாஸ்' என்ற ஆய்வுக் கட்டுரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

🌷 அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, சமூக சிந்தனையாலும் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய பண்டிட் குருதத்த வித்யார்த்தி 26-வது வயதில் (1890) மறைந்தார்.


சியாமா சாஸ்திரி

🌸 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி 1762ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். சியாம கிருஷ்ணா என்ற செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது.

🌸 சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் ஸ்ருதிகளை இயற்றியுள்ளார்.

🌸 தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரர் என எல்லோராலும் மதிக்கப்பட்ட இவர் 65வது வயதில் (1827) மறைந்தார்.




இன்றைய தின நிகழ்வுகள்


1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).

1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர்.

1721 – ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார்.

1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன.

1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரொலைனாவின் டேரம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.

1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.

1867 – கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.[1]

1903 – அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.

1923 – யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.

1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

1942 – மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1943 – சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.

1944 – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு எகிப்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை கிரேக்கத்தின் அரசுத்தலைவராக அறிவித்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

1954 – இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1960 – ஏப்ரல் புரட்சியை அடுத்து தென்கொரியாவின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.

1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.

1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.

1966 – தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1981 – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

1981 – ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.

1994 – சப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.

2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

இன்றைய தின பிறப்புகள்


1711 – டேவிடு யூம், இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776)

1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)

1785 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851)

1888 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1951)

1888 – அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், உருசிய வானியலாளர் (இ. 1983)

1889 – லுட்விக் விட்கென்ஸ்டைன், யூத ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1951)

1900 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1985)

1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குநர்

1912 – தி. க. சண்முகம், தமிழக நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1973)

1914 – ஆர். சுதர்சனம், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1991)

1917 – ஐ. எம். பேய், சீன-அமெரிக்க கட்டிடக்கலைஞர்

1938 – நீல பத்மநாபன், தமிழக எழுத்தாளர்

1965 – கெவின் ஜேம்ஸ், அமெரிக்க நடிகர்

1967 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (இ. 2012)

1970 – சரண்யா பொன்வண்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1970 – மெலனியா திரம்ப், அமெரிக்காவின் முதல் பெண், அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் மனைவி

1973 – சமுத்திரக்கனி, தமிழகத் திரைப்பட இயக்குநர்

இன்றைய தின இறப்புகள்


680 – முதலாம் முஆவியா, உமையா கலிபா (பி. 602)

1865 – ஜான் வில்க்ஸ் பூத், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்த அமெரிக்க நடிகர் (பி. 1838)

1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)

1920 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1887)

1961 – ஹரி சிங், இந்தியாவின் சம்மு காசுமீர் சுதேச சமத்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (பி. 1895)

1976 – க. இராமச்சந்திரா, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர்

1977 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)

1991 – வேலா அரசமாணிக்கம், தமிழக இதழாளர், பேச்சாளர் (பி. 1937)

2005 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பராகுவை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1917)

2016 – எம். எச். முகம்மது, இலங்கை அரசியல்வாதி (பி. 1921)

இன்றைய தின சிறப்பு நாள்


செர்னோபில் விபத்து நினைவு நாள் (உருசியா, பெலருஸ்)

இணைவு நாள் (தான்சானியா)

அறிவுசார் சொத்துரிமை நாள்