👉 1781ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல் என்பவர் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்.


நினைவு நாள் :-


கா.நமச்சிவாயம்

👉சிறந்த தமிழ் அறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.

👉இவர் நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம். மாணவர்கள் கேள்வி கேட்க, இவர் பதில் கூறுவார்.

👉அந்த நாட்களில் வித்வான் பட்டங்கள் சமஸ்கிருத அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அதனால் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றவர்களுக்கும் வித்வான் பட்டம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இவரது கருத்தை அரசு ஏற்று அதை செயல்படுத்தியது.

👉1905 வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார்.

👉பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங் களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களை யும் எழுதினார். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

👉எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதிய கா.நமச்சிவாயம் 60-வது வயதில் 1936ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஜேன் டெலானோ

✍ நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் 1886ஆம் ஆண்டு நர்ஸிங் பயிற்சியில் பட்டம் பெற்ற பிறகு, புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். மேலும் இவர் செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார்.

✍ இவர் 1898ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்பெயின் போரின்போது, நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

✍ தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 1909ஆம் ஆண்டுவரை அங்கு பணிபுரிந்தார். பின்பு செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார்.

✍ அமெரிக்க தேசிய செஞ்சிலுவை செவிலியர் சேவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி ஒருவராகப் பாடுபட்டு, அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார். முதல் உலகப் போரின்போது, இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.

✍ ஐரோப்பாவில் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ தனது 57வது வயதில் (1919) மறைந்தார்.



இன்றைய தின நிகழ்வுகள்


624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குறைசிகளுக்கும் இடையில் ஹெஜாஸ் பகுதியில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

1138 – கர்தினால் கிரெகோரியோ கோண்டி எதிர்-திருத்தந்தையாக ஆறாம் விக்டர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டார்.

1567 – எண்பதாண்டுப் போர் ஆரம்பமானது.

1639 – ஆர்வர்டு கல்லூரிக்கு சமயவாதி யோன் ஆர்வர்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.

1640 – இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]

1697 – கடைசி மாயா பேரரசின் தலைநகரம் நோச்பெட்டென் எசுபானிய தேடல் வெற்றி வீரர்களிடம் வீழ்ந்தது.

1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.

1809 – சுவீடன் மன்னர் நான்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவியிழந்தார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப் படையினரைப் பயன்படுத்த இணங்கியது.

1881 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். (யூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).

1884 – எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கர்த்தூம் நகர் மீதான சூடான் மகுதிய இயக்கத்தின் முற்றுகை ஆரம்பமானது.

1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர்.

1900 – பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.

1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1930 – புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அறிவித்த கட்டாய 3-நாள் “வங்கி விடுமுறை” முடிவடைந்து அமெரிக்க வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ’டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.

1940 – உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.

1943 – பெரும் இன அழிப்பு: செருமனியப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.

1954 – முதலாம் இந்தோசீனப் போர்: வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.

1957 – கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1979 – கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1988 – உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.

1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.

1996 – இசுக்காட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

1997 – இந்தியாவின் பிறரன்பின் பணியாளர்கள் சபை அதன் தலைவர் அன்னை தெரேசாவின் இடத்துக்கு நிர்மலா ஜோஷியைத் தேர்ந்தெடுத்தது.

2003 – இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

2007 – 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

2008 – தங்கத்தின் விலை நியூயார்க்கில் முதல் தடவையாக அவுன்சிற்கு $1,000 ஐத் தாண்டியது.

2012 – சுவிட்சர்லாந்தில் சுரங்கம் ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 – அங்காராவின் மத்திய பகுதியில், குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதில், 37 பேர் கொல்லப்பட்டனர், 127 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1843 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (இ. 1909)

1855 – பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1916)

1899 – புர்குல ராமகிருஷ்ண ராவ், ஐதராபாது மாநில முதலமைச்சர் (இ. 1967)

1941 – மஹ்மூட் தர்வீஷ், பாக்கிஸ்தானியக் கவிஞர் (இ. 2008)

1949 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (இ. 2015)

1969 – விஜயேந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியார்

1980 – வருண் காந்தி, இந்திய அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்


1804 – தாமோதர பாண்டே, நேபாள இராச்சியத்தின் தலைமை அமைச்சர் (பி. 1752)

1881 – இரண்டாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1818)

1906 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1820)

1936 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1876)

1941 – ம. வே. மகாலிங்கசிவம், ஈழத்துத் தமிழறிஞர், புலவர், சொற்பொழிவாளர் (பி. 1891)

1953 – டி. என். தீர்த்தகிரி, இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. 1880)

1972 – திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தமிழக நடன ஆசிரியர்

1982 – ஏ. நாகப்பச் செட்டியார், இந்தியத் தொழிலதிபர் (பி. 1915)

1986 – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)

1986 – மர்ரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (பி. 1904)

2000 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவப் படைத் தலைவர் (பி. 1913)

2006 – கென்னத் ஸ்ட்ரீட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1920)

2015 – தி. சு. கிள்ளிவளவன், தமிழ்நாட்டு அரசியலாளர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1926)

2015 – சூசெட் ஜோர்டன், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1974)

இன்றைய தின சிறப்பு நாள்


தேசிய யானை நாள் (தாய்லாந்து)