சோளிங்கர் - அரக்கோணம் சாலையில் உள்ள அப்பங்கார குளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக சோளிங்கர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே விவசாய நிலத்தில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் கண்டனர். உடனே சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்ஐ பசலைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.