காவேரிப்பாக்கம் அடுத்த சங்கரன்பாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (66), விவசாயி.
இவருக்கு கிட்னியில் கல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி வலி தாங்க முடியாமல், மன வேதனையில் இருந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பாலூச்செட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.