✍ தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியர் தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை 1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார்.

📝 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலுன்றிய தனிநாயகம் அடிகள் மறைந்தார். 

🚂 1897ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை போஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

✈ 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

முக்கிய தினம் :-

உலக கடித தினம்
📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.

📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.


பிறந்த நாள் :-

செம்பை வைத்தியநாத பாகவதர்
🎵 கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த செம்பை வைத்தியநாத பாகவதர் 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார்.

🎵 தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என தமிழகத்தின் பல இடங்களிலும் கச்சேரி நடத்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல சபாக்கள், இசை விழாக்களில் பாடினார். 

🎵 இவருக்கு காயன காந்தர்வ, சங்கீத கலாநிதி, பத்ம பூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

🎵 சங்கீத உலகில் அழியாப் புகழ்பெற்ற செம்பை வைத்தியநாத பாகவதர் தனது 78-வது வயதில் (1974) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் விதமாக 1996-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இசை விழா நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞருக்கு செம்பை விருது வழங்கப்படுகிறது.

புலித்தேவர்
🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் காத்தப்பப் பூலித்தேவர் என்பதாகும். பூலித்தேவர் என்னும் பெயர் புலித்தேவர் என்று அழைக்கப்பட்டது.

🐅 இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதல் முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

🐅 புலித்தேவர் 1767ஆம் ஆண்டு மறைந்தார். தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது.