கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் கொரோனா சிறப்பு முகாம் பற்றி விளக்கும் காணொளி

கொரோனா சிறப்பு முகாம் குறித்து வீடியோ வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி 760 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.