வாணி ராணி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இவருக்கு கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் கோமாவில் ஆழ்ந்துவிட்ட இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.