ஆற்காடு அருகே ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்தவர் வசந்த்(23). இவர் தனது நண்பர்கள் திமிரியை சேர்ந்த விஜம்(22). மருத்துவாம்பாடியை சேர்ந்த. சூர்யா(22), மனோஜ்(25) ஆகியோருடன் கடந்த. 22ம் தேதி ஆற்காடு அடுத்த சாத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனி அருகில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது. அவ்வழியாக சாத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் மதிவாணன்(29), அவரது தம்பி ராமமூர்த்தி(25) ஆகியோர் ஒரே பைக்கில் சென்றனர். அப்போது வசந்த், மதிவாணன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மதிவாணன், சூர்யா ஆகியோர். ஆற்காடு தாலுகா போலீசில் நேற்று முன்தினம். தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில். இன்ஸ்பெக்டர் காண்டீபன், எஸ்ஐ. அசோக்குமார் ஆகியோர் வழக்குப்பதிந்து இருதரப்பு புகாரின்பே சூர்யா, மனோஜ், விஜய், மதிவாணன், ராமமூர்த்தி ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.